விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டது இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.