"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எனும் பரப்புரை பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். இந்நிலையில், நாகல்நகர் ரவுண்டானா அருகே 10.5% இட ஒதுக்கீட்டின் அநீதியை எதிர்த்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் சார்பாக அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.