Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பெரிய ஏரிக்கரையில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக ஆட்சியரிடம் விவசாய சங்கம் புகார்

Tirupathur, Tirupathur | Sep 1, 2025
திருப்பத்தூர் நகராட்சி பெரிய ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கோழி இறைச்சி கடைகளின் இறைச்சிகள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக தற்போது மாறி வருகிறது. இதனால் ஏரிக்கரை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த இறைச்சிகள் மற்றும் குப்பைகளால் ஏரியில் உள்ள நீரின் மாசு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலையில் உள்ளது என புகார் அளிக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us