கடலையூர் அருகே உள்ள வள்ளிநாயகபுரத்தில் முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.