கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக வளாக பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு திருஉருவ சிலைக்கு மத்திய கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.