திருச்சி திருவெறும்பூர் அருகே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி மற்றும் பிரபாகரன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர் அவர்களது உடல் துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.