திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் வீடியோ எடுத்து பதிவிட்ட ரீல்ஸ் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் வகுப்பறைகளில் முன்பாக நின்றவாறு மாணவர்கள் வீடியோ எடுத்து பல்வேறு பின்னணி இசை சேர்த்து ரிலீஸ் பதிவிட்டுள்ளனர். செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.