திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே முத்து நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி பாக்கியலட்சுமி(25) இவர் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து பாக்கியலட்சுமி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.