வத்திராயிருப்பு செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் மூன்று முறை மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மூளைக்காய்ச்சல் வருவதற்கான காரணத்தை கண்டறிந்து முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் மூலம் செலவு ஏதும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுவன் பூரண நலம் பெற்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும் நிலையில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெய்சிங் பேட்டி அளித்தார்