ஜவ்வாது மலை புதூர் நாடு மொழலை கிராமத்தைச் சேர்ந்த கடுக்காலி மகன் கோவிந்தன் இவர் இன்று வீட்டின் அருகே அமர்ந்து கொண்டு மதுபானத்தை குடித்துக் கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தின் பெயரில் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.