மிட்டூர் அருகே நாச்சியார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி(70) இவர் இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மதுபோதையில் மணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், மணியை பலமாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.