திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் காயத்திரி (19). இவர், திருத்தணி அரசு கலை கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார், ஊரில் கோவில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றதால் இரவு சுவாமி ஊர்வலத்தின் போது குடும்பத்துடன் கலந்து கொண்ட காயத்திரி தெருவில் நடனமாடியதாக கூறப்படுகிறது. இதை கண்டதும் அவரது பெற்றோர் காயத்திரியை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கல்லுாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,