திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த பச்சிளம் சிசுவின் தலையைத் தவிர உடலை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. அதேபோல ஈ எறும்புகள் போன்ற சிறு சிறு உயிரினங்களும் ஒட்டுண்ணிகளும் அந்த சிசுவை குதறியுள்ளன.