திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் விக்னு(எ) விக்னேஷ்(28). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழிப்பறை வழக்கில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார். தன்னிடம் தனிப்படை போலீசார் வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றதால் பயந்து போன விக்னேஷ் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து தனது கை, கழுத்தில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.