ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தின வார விழாவை முன்னிட்டு மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை பொறுப்பு முதல்வர் மகேஷ் ஆர் எம் ஓ வனிதா மலர் மருத்துவர் கணேஷ் பிளேட்டோ ஆகியோர் கலந்து கொண்டு மனித சங்கிலி மூலமாக தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உணர்த்தினர். மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்