ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த தியாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தியாகராஜனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்