போக்குவரத்து கழகத் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.