ஆத்தூரைல் கடந்த 2020ம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் ரசூல் மைதீன் என்பவரை செம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி அவர்கள் குற்றவாளியான ரசூல் மைதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்