சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 72 வீரர்களும் பங்கேற்றனர்.