சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி எசலி மலையில் அமைந்த நூற்றாண்டு பழமையான ஸ்ரீதேவி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இரு நாட்கள் கணபதி,நவகிரக ஹோமங்கள்,கோபூஜை நடந்தன.இன்று காலை பூஜைகளுடன் துவங்கி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பக்தர்களுக்கு அபிஷேக நீர் தெளிக்கப்பட்டது.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்