வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் முத்தரை சமுதாய மக்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீதம் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான முத்தரையர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.