தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற நான்கு பேர் கடந்த 6ந் தேதி கச்சத்தீவில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் வழக்கு மூன்றாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் செப்.01ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்