ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகையை முன்னிட்டு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 44 பயனாளிகளுக்கு ரூ.36.87 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்