ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்திருந்தனர்.மீனவர்களின் வழக்கு இன்று ஐந்தாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஏழு மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் ஏழு பேருக்கும் வரும் 17ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீடித்து உத்தரவிட்டார்