திண்டுக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார் இதற்காக தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். இதனிடையே இரவு 8 மணிக்கு திண்டுக்கல் வந்த எடப்பாடி பழனிச்சாமி பேச தொடங்கியதும் அழைத்துவரப்பட்ட பொதுமக்கள் கலைந்து செல்ல தொடங்கினர். எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தை யாரும் காது கொடுத்து கேட்க விரும்பாமல் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறினர்.