Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: மான்கானூர் பகுதியில் ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு- 2 பேர் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

Tirupathur, Tirupathur | Sep 4, 2025
மான்கானூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் பால் வியாபாரியான இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த முதல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட நினைத்து ஆடுவெட்டி பிரியாணி சமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஆடு வெட்டுவதற்காக கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரை வரவழைத்து ஆடு வெட்டி விட்டு அதனை தோல் உரிக்க வீட்டின் பின்புறம் இருந்த வாழை தோப்பில் இருந்த மின்சார கம்பத்தின் அருகே சென்றபோது அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். 2பேர் காயமடைந்தனர் இது குறித்து கந்திலி போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us