ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு பைபாஸ் சாலையில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடி வந்ததால் இரண்டு இருசக்கர வாகனங்களும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் .காயம் அடைந்தவர்கள் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்