திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட MGR- காலனி சேர்ந்த பாலு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காட்டுப்பன்றி தாக்கும் சிசிடிவி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டுப்பன்றி தாக்கிய பாலு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.