இந்திராநகரை சேர்ந்த தமிழ்செல்வி(70) கடந்த ஜூலை 21-ம் தேதி ரயில் நிலையம் அருகே ATM-ல் பணம் எடுக்க சென்றபோது மர்மநபர் நூதன முறையில் தமிழ்செல்வியை ஏமாற்றி ATM-கார்டை திருடி வங்கி கணக்கில் இருந்த ரூ.1,30,000 பணத்தை திருடியதாக நகர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்