நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-5-2025) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு.