கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் கேண்டினில் சமைக்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் எலி இருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.