நிலக்கோட்டையில் 2011-ம் ஆண்டு சரவணகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் நிலக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் (எ)லிங்கசாமி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி, முதல் குற்றவாளி இறந்த நிலையில் ,3,4ம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு மகாலிங்கம் (எ) லிங்கசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.50,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.