ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். இந்த நிகழ்வில் விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்