திருப்பத்தூர் நகர் ஜெண்டாஹல்லி மார்க்கெட் மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல மசூதி அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பவும் மாலை 4 மணியளவில் வந்து வெளியே பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது பின்னர் மசுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. அதன் சிசிடிவி காட்சிகள் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.