தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , இன்று மதியம் 12 மணிக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்