திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 4 கோடியே 16 இலட்சத்து 34,119 கிடைத்துள்ளது. தங்கம் 890 கிராமும், வெள்ளி 12ஆயிரத்து 275 கிராமும் கிடைத்தது.