பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணி நிரந்தம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணிவரன்முறை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று மாநிலம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.