ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் ,ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாமில் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முகாமில் ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்