ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஓடையில் கரைக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது .விழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியபடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது