திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நகர் டிஎஸ்பி.கார்த்திக் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தனியார் அறக்கட்டளை உதவியுடன் இருவருக்கும் ஊனமுற்ற தள்ளுவண்டி மற்றும் வாக்கர் அன்பளிப்பாக வழங்கினர்.