தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற நான்கு பேர் கடந்த ஆகஸ்ட் 6ந் தேதி கச்சத்தீவில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் வழக்கு ஐந்தாவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 24ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.