சிங்கம்புணரி அதன் சுற்றுப்புற பகுதிகளில் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. காளாப்பூர்,எஸ்.வி.மங்கலம்,மருதிப்பட்டி,முறையூர்,சூரக்குடி என பல பகுதிகளில் கனமழை பெய்தது தொடர்ந்து காற்றுடன் பெய்த கனமழையால் காளாப்பூரில் பழமையான பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்ததில் அருகில் இருந்த பனைமரத்தை உடைத்து திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.