கோவில்பட்டி பூந்தோட்ட நகர் வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சார்ந்தவர் காளிராஜ். இவர் பசுவந்தனை சாலை சாய் சிட்டி அருகே சாணி பவுடரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளிராஜ் எதற்காக சாணி பவுடர் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்