ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது தீர்க்கப்படாத பிரச்சனைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினர். இன்றைய கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்.பி அலுவலகம் தகவல் வெளியிட்டு உள்ளது