திருப்பத்தூர் மாவட்டம் பரதேசிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 28 இவர் இன்று பரதேசிபட்டி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குனிச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் செல்லும் போது பின்னால் வேகமாக வந்த சேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். இதுகுறித்து கந்திலி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.