குளத்தூர் அருகே பூசனூர் கிராமத்தில் ஆவணி மாதம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. இப்போட்டி பூசானூரில் இருந்து விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.