பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மேலமாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் சென்று பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளின் தரம் குறித்து பார்வையிட்டார், தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு பார்த்தார், பிறகு மாணவர்களுக்கு சுவையாகவும் தரமாகவும் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்,