பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மாசாணம் என்பவரை கொலை செய்த வழக்கில் பழனி அழகாபுரி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி குற்றவாளியான பழனிச்சாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்