குனிச்சி கிழக்கு வட்டம் பகுதியைச் சேர்ந்த காளியப்பனின் மனைவி அலங்காரம் என்பவர் மூதாட்டிக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில்,மூதாட்டி அலங்காரம் தனிமையில் வசித்து வருகிறார் திடீரென இன்ற வீட்டில் தீ மள மள வென எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.