பரமக்குடியில் அமைந்துள்ள புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் நவநாள் திருப்பலி கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் அலங்கார மாதா கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது முக்கிய நிகழ்வாக இன்று சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம்,பரமக்குடி பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று திருத்தேர் பவனி நடைபெற்றது.